Monday 31 December 2012

இன்னலற்ற வாழ்க்கை வாழ - சாலை பாதுகாப்பு

தேசிய சாலை பாதுகாப்பு வாரம்ஜனவரி 1 முதல் ஜனவரி 7 வரை!


       இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி1  முதல்7  ஆம் தேதி வரை  தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம்(  National Road Safety Week, January 1 to 7) கடைபிடிக்கப்படுகிறது.
         நம் மக்களிடையே, விபத்துக்களைக் குறைப்பது,  விபத்து ஏற்படாமல் தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அந்நாட்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
         சாலை விபத்துக்களால் பலர், வருமானம் ஈட்டும் குடும்பத்தின் உறுப்பினரை, தாய்தந்தையரை, வாழ்க்கைத்துணையை இழக்கின்றார்கள். பலர் பிள்ளைகளை இழந்துவிடுகின்றார்கள். இதனால், குடும்பத்தினர் நிம்மதி இழந்துவாழ நேரிடுகின்றது. மேலும், இவ்விபத்துகள் நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கிவே செய்கின்றன.
         இத்தகைய சாலை விபத்துகள் நிகழாமல் தடுக்கவும், மக்களின் சாலைப் பயணங்கள் இனிமையாக அமையவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
         இவை மட்டும் போதாது, மக்களாகிய நமது பங்களிப்பும் தேவையான ஒன்றாகின்றது. .
         சாலையில் வேகம் காட்டுவது விவேகம் அல்ல. மேலும், சாலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு, கவனத்தை வேறு இடத்தில் வைத்துக் கொண்டு, விதிகளுக்கு முரணாக  வாகனத்தை ஓட்டுவது  நமக்கும் நமது  குடும்பத்தினருக்கும் பல்வகை இழைப்பையே தரும்.
         சாலை விபத்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் பலியாகின்றார்கள். இதில் சுமார் 11 முதல் 12 சதவிகித மரணம் தமிழகத்தில் நடக்கின்றது .   இதில், சென்னையில் மட்டும் சுமார் 500 பேர்  உயிரிழக்கின்றார்கள்.
          சாலை விபத்துகளில் அதிகமாக இளைஞர்கள்தான் பலியாகி வருகிறார்கள் என்ற தகவல் மிகுந்த வேதனையளிக்கும் ஒன்றாகும்.
          இதற்கு முக்கிய காரணம், விளேயாட்டுத்தனமும், பாதுகாப்பற்ற மற்றும் தலைக் கவசம் அணியாத இருசக்கர வாகனப் பயணமுமே.
                              இந்திய அளவில், எண்ணிக்கையில்.  சாலைவிபத்தில் இளைஞர்கள் பலியாவது தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது என்பது மேலும் வேதனையளிக்கும் ஒன்றாகும்.
          இளைய சமுதாயம்  பாதுகாப்போடு இன்னலற்ற வாழ்க்கை வாழ அவர்களோடு அனைவரும் புத்தாண்டில் உறுதிமொழி ஏற்போம்!

(மேலேயுள்ள படம் எவரையும் புண்படுத்தும் நோக்கமில்லாது எடுத்துக்காட்டாக என்னால் பயன்படுத்தப்பட்டுள்ளது)

“பொன்னியின் செல்வன்”உண்மை வரலாறா ? கதையா?



“பொன்னியின் செல்வன்”உண்மை வரலாறா ? கதையா?
                    படிக்கும் ஆர்வமுள்ளவர்கள், எழுத்துலக ஜாம்பவான், திரு.கல்கியின்பொன்னியின் செல்வன்கதையைப் படிக்காமலும் அதன்சுவையை சுவைக்காமலும் இருக்கமுடியுமா என்பது ஐயமே! நான் படித்திருக்கின்றேன்!

        
ஆயினும் ஒன்றை சொல்லியாகவேண்டும். வரலாறு என்பது வேறு, கதை என்பது வேறு

   
திரு. கல்கி அவர்கள் எழுதியது சோழர் குலம் பற்றிய உண்மை வரலாறு என்றே பலரும் எண்ணுகின்றார்கள். அவ்வாறு எண்ணுவது மிகவும் தவறு.

    “பொன்னியின் செல்வன்என்பது, வரலாற்றில் நடந்த ஒரு,மிகச் சில நிகழ்வுகளைக் கொண்டு திரு. கல்கி அவர்கள் தனது கற்பனையால் புணைந்து எழுதிய மிகப் பிரம்மாண்டமான கதை.

     ஆனால், அதுவே சோழர் வரலாறு அல்ல.

உதாரணத்திற்குச் சில:-

     1) கதையின் பெயரில் உள்ளது போல இராசராச சோழனுக்குபொன்னியின் செல்வன்என்ற மெய் கீர்த்தியே ( பட்டப் பெயர்கிடையாது.

     அது திரு.கல்கி அவர்களின் கற்பனையால் கிடைத்து, உலகமெலாம் பரவிய பெயர் என்பதே சரியாகும்.

      2) வல்லவராயன் வந்தியத்தேவன் ஒரு வாணர்குல இளவல் என்பது திரு.கல்கி அவர்களின் கற்பனை.

       வரலாற்றில், அக்காலகட்டத்தில் வாணர்குலம் சோழருக்கு எதிரான குலமாயிருந்தது.

       வரலாற்றில், குந்தவையை மணந்த வல்லவராயன் சாளுக்கிய அரசகுலத்தைச் சேர்ந்த ஒருவன்.

      3) ஈழத்திற்கு, அதாவது இலங்கைக்கு, இராசராசனின்  தகப்பன் சுந்தர சோழனும், இராசராச சோழனும் போர் நிமித்தம் சென்றார்கள் என்பது திரு.கல்கி அவர்களின் கற்பனை.  
  
      ஆனால் உண்மையில்,    வரலாற்றில், சுந்தர சோழனோ அவன் மகன் முதலாம் இராசராச சோழனோ இலங்கைக்குச் செல்லவேயில்லை.

      முதலாம் இராசராசன் காலம் வரையில், இலங்கையின் மீது படையெடுத்துச் சென்ற முதல் சோழ அரசகுமாரன், இராசராச சோழனின் மகனும், சோழர் படைக்குத் தலைமையெற்றுச் சென்ற, அப்போது, இளவரசனாயிருந்த முதலாம் இராசேந்திரன் சோழனே ஆவான்.

      4) மேலும், முதலாம் இராசராச சோழனின் சிறிய தகப்பனாகியஉத்தமசோழன்என்பவன் சோழர் குலத்தோன்றலே அல்ல, அதாவது முதலாம் கண்டராதித்த சோழனுக்குப் பிறந்தவனே அல்ல என்பது திரு. கல்கி அவர்களின் கற்பனைகளுள் ஒன்று.
      முதலாம் கண்டராதித்த சோழனின் புதல்வன் உத்தமசோழன் என்பதே வரலாறு.
    
      
சுந்தர சோழனின் இறப்பிற்குப் பின்னர் அவனது மகன் முதலாம் இராசராசனே சோழப்பேரரசுக்கு மன்னனாக வேண்டும் என்று நாடே விரும்பிய போது, அரியாசணத்தில் அமர உரிமையும், விருப்பமும் உள்ள தன் சிறிய தகப்பன் உத்தமசோழனே அடுத்து அரசனாக வேண்டும் என்று இராசராச சோழன் அரசுரிமையை விட்டுக்கொடுத்தான் என்பதும் வரலாறு.
                புராணங்கள் பற்றிக் கூறும்போது
             நன்று புராணங்கள் செய்தார் -- அதில்
                               நல்ல கவிதை பலப்பல தந்தார்.
                              கவிதை மிகநல்ல தேனும் -- அக்
                              கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
                              புவிதனில் வாழ்நெறி காட்டி -- நன்மை
                             போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.”
என்பான் பாரதி!

       
அது போலவேபொன்னியின் செல்வன்ஒரு நல்ல கதை மட்டுமே என்பதறிவோம்!


                                                ~~~~~~~~~~**********~~~~~~~~~~~