தமிழும் தமிழரும்-6
~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~
தனது 37 பக்கங்களில் ஒன்றில் கூட பிறமொழிச்
சொல் இல்லாமல், நல்ல தமிழ்மொழியில் வெளியிடவே
முடியாத தினமலர் தனது தலையங்கம் மூலம் தமிழ்மொழி மீது காட்டுவது அக்கறையா???
‘தமிழைத் தாய்ப்பாலுடன் கலந்து ஊட்டும் தாய்மார்கள் எண்ணிக்கை குறைந்து ‘மம்மி டாடி’ பேசுவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது’.
- தினமலர் தலையங்கம்,26/6/14.
இதை ‘தினமலர்’ சொல்லக்கூடாது.
நகரப்பகுதியில் பல தாய்மார்கள் இப்படிச் செய்யலாம். ஆனால் தமிழகத்தின் லட்சோபலட்ச கிராமங்களில் இந்நிலை இல்லவேயில்லை.
சரி, சில தாய்மார்கள் குழந்தைகளுக்குச் சொல்லித்தர, அதனால் பழக்கத்திற்கு வரும் பிறமொழிப் பயன்பாடு என்பது தமிழை, அதன் வளத்தை சிதைக்கும் என ஏற்றுக்கொள்வோம். ஆனால், அதனை அதிவிரைவாகச் செய்யும் வேலையை தினமலர் தானே செய்துவருகின்றது!
அன்றாடம் மோசமான ஆங்கில/பிற மொழிச் சொற்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து பல லட்சம் வாசகர்களிடத்தில் அவற்றை நடைமுறைப் படுத்திவரும் வேலையை, ‘பல லட்சம் வாசகர்கள் படிக்கும் நாளிதழ்’ என மார் தட்டிக்கொள்ளும், தினமலர் தானே செய்துவருகின்றது!
அடுத்து, ‘வேலை கிடைக்கவேயில்லை’, தமிழ் பட்டமேற்படிப்பாளர்களுக்கு என்று முதலைக்கண்ணீர் வடிக்கும் தினமலர் தனது நிறுவனத்தில் தமிழ் மொழி அறிந்தவர்களையா வேலையில் வைத்துள்ளது??
வெறுமனே, ‘ இது தமிழ்மொழி ’ என்று தெரிந்தவர்களைத் தானே வேலைக்கு வைத்துள்ளது.
அதனால்தானே அப்பத்திரிக்கை தனது 37 பக்கங்களில் ஒன்றில் கூட பிறமொழிச் சொல் இல்லாமல், நல்ல தமிழ்மொழியில் வெளியிடவே முடியவில்லை !!
ஒரு மொழியால் பொருளீட்டி, உண்டு வளரும் பத்திரிக்கைகள் நன்றிக்கடனாக முதலில் செய்யவேண்டியது அம்மொழியைக் காக்கும் வேலையாகத்தான் இருக்கவேண்டும். அதை விடுத்து மாற்றான் தாய்க்கு கொடிபிடிப்பது கேவலம்!
No comments:
Post a Comment