தமிழும், தமிழரும் - 5.
தமிழும், தமிழரும் - 5.
~~~~~~~~~~~~~
அந்நிய மொழித் திணிப்பு எதிர்ப்பு !
ஆங்கில மொழியை ஆங்கிலேயர் கட்டாயப்படுத்தி தமிழர் மீது திணிக்கவில்லை...
ஆனால், அக்காலத்தில் அம்மொழி ஆள்பவனது
மொழியாக, ஆதிக்க
மொழியாக இருந்ததால் அதைக் கற்றுக்கொண்டால் நாட்டை ஆள்கின்றவரோடு
நெருக்கத்தை
ஏற்படுத்திக் கொள்ளலாம் அதன் மூலம் சலுகைகளைப் பெறலாம் என்கின்ற எண்ணத்தால் சிலருக்கு ஆங்கிலத்தின் பேரில் ஈர்ப்பு ஏற்பட்டது.
அப்படி கற்றுக்கொண்டதால் அந்நபர்களுக்கு
'ஆளுபவனின்
மொழி'
அறிந்தவன்
என்கிற
பெயரை
ஏற்படுத்தியது.
இக்காரணத்தால்,ஆங்கிலம் கற்றவர் மீதான மதிப்பு பாமரரிடையேயும், ஏன் படித்தவரிடையேயும்
கூட
உயரத்தொடங்கியது.
நாளடைவில் இப்பெயருக்கும் புகழுக்குமான ஆசைப் பலருக்கு ஏற்படலாயிற்று.
அதுவே காலப்போக்கில் கட்டுக்கடங்காத ஆங்கில மோகத்தை ஏற்படுத்தி தாய்மொழி மட்டுமே தெறிந்தவரை இளக்காரமாகப் பார்க்கும் நிலை ஏற்படலாயிற்று.
அன்றிலிருந்து இன்றளவும் 'அய்யா சீட்டு கொடுங்க' என்று கோரும் தமிழருக்கு
கொடுக்கப்படும்
மறியாதையை
விட
'ஒன்
டிக்கெட்
ப்ளீஸ்'
என்று கோரும் தமிழருக்கு கொடுக்கப்படும் மறியாதை சற்று அதிகமாகவே
உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
தாய்மொழி இருக்கும்போது, அன்றைய காலத்தில், உரிய தேவையற்று,
இன்னொரு
மொழியான
ஆங்கிலத்தின்
மேல்
ஏற்பட்ட
மோகத்தின்
விளைவாகவே
இன்றளவும்
தமிழ்
மட்டும் பேசும்
தமிழரை இளக்காரமாக, இரண்டாம்
தர
மனிதராகப்
பார்க்கப்படும்
நிலை
தமிழரிடையே
உள்ளது.
இச்சூழலில், இன்னுமொறு மொழிக்கு, அதிலும் அம்மொழிக்கு ‘சிவப்புக் கம்பள வரவேற்பு’ கொடுத்து உலவ விடுவதால் தமிழ் மட்டுமே அறிந்தோர், தமிழ் மட்டுமே பேசுவோர்
மேலும்
பின்னுக்குத்
தள்ளப்பட மாட்டார்கள்,
தமிழ் மொழி
மூன்றாம் தரமாகக்கூடிய
நிலை
வராது என்கின்ற
உத்தரவாதத்தை
எவராலும் தர
இயலாது.
இது ஒருபுறமிருக்க, ஏற்கனவே பலப் பல கலப்புச் சொற்களால் தமிழ்மொழியின் வளம் குறைந்துகொண்டே வரும்வேளையில் மொழித்திணிப்பால்
தமிழ்
மொழி
சிதைந்து
போகாது
என்று உறுதியாகக்கூற முடியாது.
தமிழ் மொழியின் வளம்பெருகக் குந்தகம் ஏற்பட்டு
விடக்கூடாது
என்றும் தமிழ் மொழி தமிழரிடையிலேயே இரண்டாம், மூன்றாம்
தரநிலைக்குத்
தள்ளப்பட்டு
விடக்கூடாது
என்பன போன்ற
எண்ணங்களாலேயே
‘அந்நிய மொழித்
திணிப்பு
எதிர்ப்பு’
உண்டாகின்றது.
No comments:
Post a Comment